🔗

புகாரி: 1924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا يُنَادِي فِي النَّاسِ يَوْمَ عَاشُورَاءَ «إِنَّ مَنْ أَكَلَ فَلْيُتِمَّ أَوْ فَلْيَصُمْ، وَمَنْ لَمْ يَأْكُلْ فَلاَ يَأْكُلْ»


பாடம் : 21 நோன்பு நோற்பதாக பகலில் தீர்மானிப்பது.

அபூதர்தா (ரலி) அவர்கள் என்னிடம் உங்களிடம் உணவு ஏதும் இருக்கிறதா? என்று கேட்பார்கள்; இல்லையென்று நாங்கள் சொன்னால், நான் இன்றைய தினம் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்! என்று கூறுவார்கள்! என (அவர்களின் துணைவி) உம்மு தர்தா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூதல்ஹா (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்துள்ளனர்.

1924. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் ‘யார் சாப்பிட்டுவிட்டாரோ அவர் (நோன்பாக) இருக்கட்டும்!’ யார் சாப்பிடவில்லையோ அவரும் நோன்பாக இருக்கட்டும்! என்று ஒருவரை அனுப்பி மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.
Book : 30