كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»،
وَقَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ {مَآرِبُ} [طه: 18]: «حَاجَةٌ»،
قَالَ طَاوُسٌ: {غَيْرِ أُولِي الإِرْبَةِ} [النور: 31]: «الأَحْمَقُ لاَ حَاجَةَ لَهُ فِي النِّسَاءِ»
பாடம் : 23
நோன்பாளி மனைவியை அணைத்துக்கொள்ளல்.
‘‘(நோன்பாளிக்கு) உடலுறவு மட்டுமே தடை செய்யப்பட்டதாகும் (ஹராம்)” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1927. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!’
Book :30
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(இங்கு ‘உணர்ச்சி’ என்பதைக் குறிப்பிட ஹதீஸின் மூலத்தில் ‘இர்ப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதிலிருந்து பிறந்த (‘மஆரிப்’ (20:18) எனும் சொல்லுக்கு ‘தேவைகள்’ என்பது பொருளாகும்.
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘ஃகைரு உலில் இர்பத்’ (24:31) என்பதற்கு ‘பெண்ணாசை இல்லாத பேடி’ என்பது பொருள்.