«أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ، فَذَلِكَ نُقْصَانُ دِينِهَا»
பாடம் : 41 மாதவிடாய் ஏற்பட்டவள் தொழுகையையும் நோன்பையும் விட வேண்டும்.
மிகுதியான நபி வழிகளும் சரியான முடிவுகளும் மனித யூகங்களுக்கு மாற்றமாகவே அமைந்துள்ளன. முஸ்லிம்கள் நபி வழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மாதவிடாய் ஏற்பட்டவள் நோன்பைக் களாச் செய்ய வேண்டும்; தொழுகையைக் களாச் செய்ய வேண்டியதில்லை என்பதும் அவற்றுள் ஒன்றாகும் என்று அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1951. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.’
இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
Book : 30