«مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»
பாடம் : 42
களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால்…?
களாவான நோன்பை நிறைவேற்றாமல் இறந்தவருக்காக முப்பது நபர்கள் தலா ஒரு நோன்பு நோற்றால் (அவர் சார்பாக) அது நிறைவேறிவிடும் என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1952. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.’ என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
Book : 30