🔗

புகாரி: 1954

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَا هُنَا، وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَا هُنَا، وَغَرَبَتِ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»


பாடம்: 43

நோன்பாளி எப்போது நோன்பை நிறைவு செய்வார்?

சூரியனின் வட்டம் மறைந்த உடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நோன்பை நிறைவு செய்தார்கள்.

1954. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் மறைந்து, இந்த (கிழக்கு) திசையிலிருந்து இரவு (இருள்) முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் (வெளிச்சம்) பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்!

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி).

அத்தியாயம்: 30