🔗

புகாரி: 1961

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تُوَاصِلُوا» قَالُوا: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ إِنِّي أُطْعَمُ، وَأُسْقَى، أَوْ إِنِّي أَبِيتُ أُطْعَمُ وَأُسْقَى»


பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், நோன்பை இரவுவரை முழுமைப்படுத்துங்கள்! என்று அல்லாஹ் கூறுவதால் இரவில் நோன்பு கிடையாது எனும் கூற்றும்.

நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர்நோன்பு நோற்றாலும்) மக்கள் மீது இரக்கம் கொண்டும் (அவர்களின் உடல் வலிமை அழிந்து விடாமல்) அவர்களைக் காப்பதற்காகவும் அதைத் தடுத்திருக்கிறார்கள். (கடமையாக்கப்படாததைத் தம் மீது கடமைபோன்றாக்கிக் கொண்டு) வணக்க வழிபாடுகளில் மிதமிஞ்சி மூழ்குவது வெறுக்கப்படுகிறது.

1961. அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), அவர்கள் ‘நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்’ என்றோ ‘உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்’ என்றோ கூறினார்கள்.
Book : 30