🔗

புகாரி: 1986

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا يَوْمَ الجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ، فَقَالَ: «أَصُمْتِ أَمْسِ؟»، قَالَتْ: لاَ، قَالَ: «تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا؟» قَالَتْ: لاَ، قَالَ: «فَأَفْطِرِي»،

وَقَالَ حَمَّادُ بْنُ الجَعْدِ: سَمِعَ قَتَادَةَ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ، أَنَّ جُوَيْرِيَةَ، حَدَّثَتْهُ: فَأَمَرَهَا فَأَفْطَرَتْ


1986. ஜுவைரிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நோன்பு வைத்தாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை!’ என்றேன். ‘நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கும் ‘இல்லை!’ என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியானால் நோன்பை முறித்து விடு!’ என்றார்கள்.

‘நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்’ என்று ஜுவைரிய்யா(ரலி) கூறினார் என அபூ அய்யூப்(ரஹ்) அறிவித்தார்.
Book :30