🔗

புகாரி: 1994

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ: رَجُلٌ نَذَرَ أَنْ يَصُومَ يَوْمًا، – قَالَ: أَظُنُّهُ قَالَ: الِاثْنَيْنِ -، فَوَافَقَ ذَلِكَ يَوْمَ عِيدٍ، فَقَالَ ابْنُ عُمَرَ: «أَمَرَ اللَّهُ بِوَفَاءِ النَّذْرِ وَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ هَذَا اليَوْمِ»


1994. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று கூறினார். அந்த மனிதர் “(அவர்) திஙகட்கிழமையன்று -(நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!)” என்று கூறியதாக நான் நினைக்கிறேன்-

அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது! ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் “நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்!” என்று கூறினார்கள்.
Book :30