🔗

புகாரி: 2064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَقْبَلَتْ عِيرٌ وَنَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الجُمُعَةَ، فَانْفَضَّ النَّاسُ إِلَّا اثْنَيْ عَشَرَ رَجُلًا»، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا، وَتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11]


பாடம் : 11 அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் அதன் பால் சென்று விடுகிறார்கள்! (எனும்62:11ஆவது வசனத்தொடர்).

அல்லாஹ் கூறுகிறான்: வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அவர்களை இறை நினைவிலிருந்து திருப்பாது! (24:27)

அன்றைய மக்கள் வியாபாரம் செய்துவந்தனர். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று அவர்கள் முன்னே வந்தால் அதை நிறைவேற்றாதவரை அவர்களது வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ இறைநினைவிலிருந்து அவர்களைத் திருப்பாது! என்று கத்தாதா (ரஹ்) கூறுகிறார்கள்.

2064. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுகை தொழுது கொண்டிருந்தபோது வணிகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே, பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் (வணிகக் கூட்டத்தை நோக்கி கலைந்து) ஓடிவிட்டனர். அப்போது, ‘அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால், நின்ற நிலையில் உம்மைவிட்டுவிட்டு அங்கே ஓடி விடுகிறார்கள்!’ என்னும் (திருக்குர்ஆன் 62:11) இறைவசனம் அருளப்பட்டது!’
Book : 34