🔗

புகாரி: 2078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ تَاجِرٌ يُدَايِنُ النَّاسَ، فَإِذَا رَأَى مُعْسِرًا قَالَ لِفِتْيَانِهِ: تَجَاوَزُوا عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، فَتَجَاوَزَ اللَّهُ عَنْهُ


பாடம்: 18

கடனை அடைக்கச் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளித்தல்.

2078. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 34