🔗

புகாரி: 2082

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، – أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا


பாடம் : 22 குறைகளை மறைப்பதும் பொய்சொல்வதும் வியாபாரத்தை அழிக்கும்.

2082. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!’ என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
Book : 34