🔗

புகாரி: 2098

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَتْ عُكَاظٌ، وَمَجَنَّةُ، وَذُو المَجَازِ أَسْوَاقًا فِي الجَاهِلِيَّةِ، فَلَمَّا كَانَ الإِسْلاَمُ تَأَثَّمُوا مِنَ التِّجَارَةِ فِيهَا»، فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ} [البقرة: 198]، فِي مَوَاسِمِ الحَجِّ، قَرَأَ ابْنُ عَبَّاسٍ كَذَا


பாடம் : 35 அறியாமைக் காலத்தில் இருந்த கடைவீதிகளில் இஸ்லாம் வந்த பிறகும் மக்கள் வியாபாரம் செய்தனர்.

2098. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் ‘அந்த இடங்களில் வியாபாரம் செய்வது பாவம்’ என்று மக்கள் கருதினார்கள்.

அப்போது அல்லாஹ், ‘உங்களுடைய இறைவனின் அருளைத் தேடிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது!’ என்னும் (திருக்குர்ஆன் 02:198) இறைவசனத்தை அருளினான்.

‘இவ்வசனத்துடன் ‘ஹஜ்ஜுக் காலங்களில்’ என்ற வார்த்தையையும் இப்னு அப்பாஸ்(ரலி) சேர்த்து ஓதியிருக்கிறார்கள்!’ என்று அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்.
Book : 34