🔗

புகாரி: 2110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا»


பாடம் : 44 விற்பவரும் வாங்குபவரும் பிரியாதவரை முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

இப்னு உமர் (ரலி), ஷுரைஹ், ஷஅபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்…) ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர்.

2110. ‘விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு பரக்கத் செய்யப்படும். அவ்விருவரும் பொய் கூறி(எதையேனும்) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் பரக்கத் நீக்கப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
Book : 34