«مَنِ ابْتَاعَ طَعَامًا، فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ»
பாடம் : 51 அளந்து கொடுப்ப(தற்கான கூலியைத் தருவ)து விற்பவர் மற்றும் ஒப்படைப்பவர் (அல்லது கடனைச் செலுத்துபவர்) மீதே கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
இவர்கள் மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகிறார்கள்! (83:4).
(நீங்கள் அளந்து வாங்கும் போது உங்கள் விலையை முழுமையாகப் பெற்றுக் கொள்ளும் விதத்தில்) நிறைவாக அளந்து வாங்குங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீர் விற்பனை செய்தால் அளந்து கொடும்! நீர் வாங்கினால் அளந்து வாங்கும்! என்று நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
2126. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக) அவரின் கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது!’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 34