🔗

புகாரி: 2152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا زَنَتِ الأَمَةُ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا، وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ، فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ»


பாடம் : 66 விபசாரம் செய்யும் அடிமையை விற்பது.

விபசாரம் செய்யும் அடிமையை வாங்கியவர், விரும்பினால் விற்றவரிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்! என்று ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2152. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்து விட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவாது விற்று விடட்டும்!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34