أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا سَاوَمَتْ بَرِيرَةَ، فَخَرَجَ إِلَى الصَّلاَةِ، فَلَمَّا جَاءَ قَالَتْ: إِنَّهُمْ أَبَوْا أَنْ يَبِيعُوهَا إِلَّا أَنْ يَشْتَرِطُوا الوَلاَءَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» قُلْتُ لِنَافِعٍ: حُرًّا كَانَ زَوْجُهَا أَوْ عَبْدًا؟ فَقَالَ: مَا يُدْرِينِي
2156. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) (அடிமையாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் சென்றார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா(ரலி) ‘பரீராவின் எஜமானர்கள் ‘பரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினாலே தவிர அவரை விற்க மாட்டோம்’ எனக் கூறுகின்றனர்!’ என்றார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அடிமையின் (மரணத்திற்குப் பின் அவரின்) வாரிசாகும் உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத் தான்!’ எனக் கூறினார்கள்.
‘அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா?’ என்று நாஃபிவு(ரஹ்) அவர்களிடம் கேட்டேன்; அதற்கவர் ‘எனக்குத் தெரியாது!’ என்று பதிலளித்தார்!’ என ஹம்மாம்(ரஹ்) கூறினார்.
Book :34