🔗

புகாரி: 2183 & 2184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ، وَلاَ تَبِيعُوا الثَّمَرَ بِالتَّمْرِ»

2184. أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَخَّصَ بَعْدَ ذَلِكَ فِي بَيْعِ العَرِيَّةِ بِالرُّطَبِ، أَوْ بِالتَّمْرِ، وَلَمْ يُرَخِّصْ فِي غَيْرِهِ


பாடம் : 82 முஸாபனா எனும் வியாபாரம்.

மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் அராயா எனும் வியாபாரமும் முஸாபனா எனப்படும்.

நபி (ஸல்) அவர்கள் முஸாபனா, முஹாகலா (பயிர் முற்றுவதற்கு முன்பே விற்பனை செய்தல்) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2183. & 2184. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனிகளுக்காக மரத்திலுள்ள கனிகளையும் விற்க வேண்டாம்!. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.

‘இதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளுக்கு உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங்கனிகளை விற்பதற்கு ‘அராயா’வில் அல்லாதவற்றில் அனுமதிக்கவில்லை!’ என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.
Book : 34