«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي العَرَايَا أَنْ تُبَاعَ بِخَرْصِهَا كَيْلًا»
قالَ مُوسَى بْنُ عُقْبَةَ وَالعَرَايَا: «نَخَلاَتٌ مَعْلُومَاتٌ تَأْتِيهَا فَتَشْتَرِيهَا»
பாடம் : 84 அராயாவின் விளக்கம்.
ஒரு மனிதர் மற்றொருவருக்குப் பேரீச்ச மரத்தின் ஒருபோக விளைச்சலை (அன்பளிப்பாகக்) கொடுத்து விட்டு, பெற்றவர்கள் பறிக்க வரும் போது சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே உலர்ந்த பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு மரத்திலுள்ள கனிகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அராயா என்பது ரொக்கமாக உலர்ந்த பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் கொடுப்பதில் மட்டுமே ஆகும். குத்துமதிப்பாகக் கொடுப்பதில் ஆகாது என்று இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஐந்து வஸக் என்ற சஹ்ல் பின் அபீஹஸ்மாவின் அறிவிப்பு இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்களுடைய கூற்றை உறுதிப்படுத்துகிறது.
அராயா என்பது ஒருவர் மற்றவருக்கு ஒன்று அல்லது இரண்டு மரங்களை அன்பளிப்பாக வழங்குவதாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அராயா என்பது ஏழைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்சம் மரங்களாகும். ஏழைகள் (கனியும் வரை) காத்திருக்க சக்தி பெற மாட்டார்கள். எனவே, அவர்கள் உலர்ந்த கனிகளுக்காகத் தாம் விரும்பியவாறு விற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது என்று சுஃப்யான் பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2192. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
அராயாவில் மரத்திலுள்ள கனிகளைக் குத்துமதிப்பாக மதிப்பீடு செய்து உலர்ந்த பழங்களை முகத்தலளவையில் பெற்று விற்பதற்கு அனுமதி அளித்தார்கள்.
அராயா என்பது அனைவருக்கும் தெரிந்த, குறிப்பிட்ட சில பேரீச்ச மரங்களாகும. யாரும் வந்து கனிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.
Book : 34