«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُبَاعَ الثَّمَرَةُ حَتَّى تُشَقِّحَ» فَقِيلَ: وَمَا تُشَقِّحُ؟ قَالَ: «تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا»
2196. ஸயீத் இப்னு மீனா அறிவித்தார்.
‘மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையும் வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ என்று ஜாபிர்(ரலி) கூறினார்.
அவரிடம் ‘பக்குவமாகுதல் என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கவர், ‘உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது’ என விடையளித்தார்:
Book :34