🔗

புகாரி: 2209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَأْكُلُ جُمَّارًا، فَقَالَ: «مِنَ الشَّجَرِ شَجَرَةٌ كَالرَّجُلِ المُؤْمِنِ»، فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ، فَإِذَا أَنَا أَحْدَثُهُمْ، قَالَ: «هِيَ النَّخْلَةُ»


பாடம் : 94 பேரீச்சம் பாளைக் குருத்தை விற்பதும் உண்பதும்.

2209. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மரங்களில் ஒரு மரமிருக்கிறது; அது முஃமினுக்கு (இறை நம்பிக்கையுடையவனுக்கு) உவமையாகும்!’ என்றார்கள்.

நான் ‘அது பேரீச்ச மரம் தான்!’ என்று சொல்ல நினைத்தேன். அப்போது, நான் அங்கிருந்தவர்களிலேயே வயதில் சிறியவனாக இருந்தேன்! (அதனால் நான் எதுவும் கூறவில்லை.) நபி(ஸல்) அவர்கள் ‘அது பேரீச்சமரம்!’ என்று கூறினார்கள்.
Book : 34