«قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ مَالٍ لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ»
பாடம் : 97 பிரிக்கப்படாத நிலம், கட்டடங்கள் மற்றும் உடைமைகளை விற்றல்.
2214. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
‘பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விதித்தார்கள்.
Book : 34