🔗

புகாரி: 2222

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الخِنْزِيرَ، وَيَضَعَ الجِزْيَةَ، وَيَفِيضَ المَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ»


பாடம் : 102 பன்றிகளைக் கொல்வது.

நபி (ஸல்) அவர்கள் பன்றி வியாபரத்தை (ஹராமாக்கித்-) தடைசெய்தார்கள்.

2222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
Book : 34