🔗

புகாரி: 2253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ فِي الثِّمَارِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ: «أَسْلِفُوا فِي الثِّمَارِ فِي كَيْلٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ»،

وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الوَلِيدِ: حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، وَقَالَ: «فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»


பாடம் : 7 ஸலமில் தவணை குறிப்பிடுதல்.

இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அஸ்வத் (ரஹ்), ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் இவ்வாறு (முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொருளைத் தருவதாகக் கூறி விற்பதற்கே ஸலம் என்று சொல்லப்படும் என்று)தான் கூறுகின்றனர்.

விலையும் தவணையும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு முன்பணம் கொடுப்பது தவறில்லை! பலன் உறுதிப்படுத்தப்பட்ட பயிர்களில் மட்டுமே இவ்வாறு செய்யலாம்! என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2253. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மக்கள் இரண்டு மூன்று ஆண்டுகளில் கனிகளைப் பெற்றுக் கொள்வதாக முன்பணம் கொடுத்து வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அளவும் தவணையும் குறிப்பிட்ட கனிகளுக்காக முன்பணம் கொடுங்கள்!’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘அளவும் எடையும் குறிப்பிடப்பட்ட கனிகளுக்காக’ என்றுள்ளது.
Book : 35