🔗

புகாரி: 2273

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمَرَنَا بِالصَّدَقَةِ، انْطَلَقَ أَحَدُنَا إِلَى السُّوقِ، فَيُحَامِلُ، فَيُصِيبُ المُدَّ، وَإِنَّ لِبَعْضِهِمْ لَمِائَةَ أَلْفٍ»

قَالَ (شَقِيقٍ): مَا تَرَاهُ إِلَّا نَفْسَهُ


பாடம் : 13 ஒருவர் தமது முதுகில் மூட்டை சுமந்து பெற்ற கூலியில் தர்மம் செய்வதும் சுமை சுமப்பவர் பெறுகின்ற கூலியும்.

2273. அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு ‘முத்து’ கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!’

‘அபூ மஸ்வூத்(ரலி) தம்மையே இவ்வாறு (‘அவர்களில் சிலருக்கு’ என்று) குறிப்பிட்டதாக நாம் கருதுகிறோம்!’ என்று அறிவிப்பாளர் ஷகீக்(ரஹ்) கூறினார்.
Book : 37