🔗

புகாரி: 2274

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَلَقَّى الرُّكْبَانُ، وَلاَ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ»، قُلْتُ: يَا ابْنَ عَبَّاسٍ: مَا قَوْلُهُ لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ؟ قَالَ: لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا


பாடம் : 14 தரகுக் கூலி

தரகருக்குக் கூலி கொடுப்பதில் தவறில்லை என்று இப்னு சீரீன், அதாஉ, இப்ராஹீம் அந்நகஈ, ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் கருதுகின்றனர்.

இந்த ஆடையை இன்ன விலைக்கு விற்றுவிடு! இதைவிட அதிகமாக விற்றால் அது உனக்குரியது!என்று கூறுவது தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை இன்ன விலைக்கு விற்றுவிடு; இதைவிட அதிக விலைக்கு விற்றால் இது உனக்குரியது அல்லது உனக்கும் எனக்கும் பொதுவானது என்று கூறினால் அதில் தவறில்லை என்று இப்னு சீரீன் (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்லிம்கள் தமக்கிடையே விதிக்கக் கூடிய நிபந்தனைகள் (மார்க்கத்திற்கு முரணில்லாவிட்டால்) செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2274. தாவூஸ் அறிவித்தார்.

சந்தைக்கு வரும் வணிகர்களை எதிர்கொண்டு வாங்குவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ‘கிராம வாசிக்காக உள்ளூர் வாசி விற்றுத் தரக்கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

கிராமவாசிக்காக உள்ளூர் வாசி விற்கக் கூடாது என்பதன் பொருள் என்ன? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் ‘இடைத் தரகராக இருக்கக் கூடாது’ என்றார்.
Book : 37