🔗

புகாரி: 2277

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«حَجَمَ أَبُو طَيْبَةَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ لَهُ بِصَاعٍ – أَوْ صَاعَيْنِ – مِنْ طَعَامٍ، وَكَلَّمَ مَوَالِيَهُ فَخَفَّفَ عَنْ غَلَّتِهِ أَوْ ضَرِيبَتِهِ»


பாடம் : 17 ஆண் அடிமைகள் (தம் எஜமானர்களுக்குச் செலுத்தும் அன்றாட வரி(யைக் குறைக்க உதவுவது) மற்றும் அடிமைப் பெண்கள் (குறைவான விகிதத்தில்) வரி செலுத்த ஒப்பந்தம் செய்து கொள்(ள உதவு)வது.

2277. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

‘(அடிமையாயிருந்த) அபூ தைபா(ரலி), நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்; நபி(ஸல்) அவர்கள் அவருக்கு ஒரு ஸாவு அல்லது இரண்டு ஸாவு உணவு கொடுக்குமாறு கட்டளையிட்டு, அவரின் எஜமானர்களிடம் பேசி, அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்!’
Book : 37