🔗

புகாரி: 2282

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الكَلْبِ، وَمَهْرِ البَغِيِّ، وَحُلْوَانِ الكَاهِنِ»


பாடம் : 20 விபசாரிகள் மற்றும் (விபசாரம் செய்யும்) அடிமைப் பெண்களின் வருமானம்.

ஒப்பாரி வைப்பவளுக்கும் பாடகிகளுக்கும் கூலி கொடுப்பதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) வெறுத்தார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, -அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக- விபசாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள்! அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னரும், (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (24:33)

2282. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனுக்குரிய தட்சணை ஆகியவற்றை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!’
Book : 37