🔗

புகாரி: 229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

( كُنْتُ أَغْسِلُ الجَنَابَةَ مِنْ ثَوْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَإِنَّ بُقَعَ المَاءِ فِي ثَوْبِهِ )


பாடம் : 64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டிவிடுவதும் பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்.

 229. ‘நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்
Book : 4