🔗

புகாரி: 2325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ، قَالَ: «لاَ» فَقَالُوا: تَكْفُونَا المَئُونَةَ، وَنَشْرَكْكُمْ فِي الثَّمَرَةِ، قَالُوا: سَمِعْنَا وَأَطَعْنَا


பாடம் : 5 என் பேரீச்ச மரங்களை அல்லது மற்ற மரங்களை கவனித்துக் கொள். அதன் விளைச்சலில் (லாபத்தில்) என்னுடன் பங்கு பெற்றுக் கொள் என்று ஒருவர் கூறினால் அது செல்லும்.

2325. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மதீனாவாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களிடம், ‘எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள்’ என்றனர். அதற்கு அண்ணலார், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள்.

இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, ‘அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்கு பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கிறோம்’ என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், ‘செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)’ என்று கூறினார்கள்.
Book : 41