🔗

புகாரி: 2326

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّهُ حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ، وَقَطَعَ»، وَهِيَ البُوَيْرَةُ، وَلَهَا يَقُولُ حَسَّانُ:
[البحر الوافر]
وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَيٍّ … حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ


பாடம் : 6 மரத்தையும் பேரீச்ச மரங்களையும் வெட்டுதல்.

அனஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களை வெட்டும் படி கட்டளையிட்டார்கள். அதன் படி அவை வெட்டப்பட்டன என்று கூறினார்கள்.

2326. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் (இன்னும் பல மரங்களை) வெட்டியும் விட்டார்கள். இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான் ‘அல் புவைரா’ என்று கூறுவர்.

இதைக் குறிப்பிட்டுத்தான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி), ‘புவைராவின் நெருப்பு பரவிக் கொண்டிருக்க, அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல் (இயலாமையுடன்) பார்த்துக் கொண்டிருப்பது ‘பனூ லுஅய்’ குலத்து (குறைஷித்) தலைவர்களுக்கு எளிதாகிவிட்டது’ என்று (பரிகாசம் செய்து) கவிதை பாடுகிறார்கள்.
Book : 41