🔗

புகாரி: 2332

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا أَكْثَرَ أَهْلِ المَدِينَةِ حَقْلًا، وَكَانَ أَحَدُنَا يُكْرِي أَرْضَهُ، فَيَقُولُ: هَذِهِ القِطْعَةُ لِي وَهَذِهِ لَكَ، فَرُبَّمَا أَخْرَجَتْ ذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ، «فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


பாடம்: 12

நிலக் குத்தகை ஒப்பந்தத்தின் போது இடுகின்ற நிபந்தனைகளில் விரும்பத் தகாதவை எவை?

2332. ராஃபிஉ (ரலி) அறிவித்தார்.

நாங்கள் மதீனாவாசிகளிலேயே அதிகமாகப் பண்ணை வயல்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தோம். நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது நிலத்தின் உரிமையாளரிடம், ‘(நிலத்தின்) இந்தத் துண்டு(டைய விளைச்சல்) எங்களுக்குரியது’ என்று சொல்வது வழக்கம்.

சில வேளைகளில், நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் தரும்; இன்னொரு பகுதி விளைச்சல் தராது. எனவே, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு நிபந்தனையிட வேண்டாமென்று எங்களைத் தடுத்துவிட்டார்கள்.
Book : 41