🔗

புகாரி: 2382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْعِ العَرَايَا بِخَرْصِهَا مِنَ التَّمْرِ، فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ، أَوْ فِي خَمْسَةِ أَوْسُقٍ» شَكَّ دَاوُدُ فِي ذَلِكَ


2382. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘அராயா’ வகை மரத்திலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு பதிலாக ஐந்து வஸக்குகளுக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து வஸக்குகளுக்கோ விற்பனை செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் இப்னு ஹுஸைன்(ரஹ்), ‘ஐந்து வஸக்குகளுக்கும் குறைவாகவா? ஐந்து வஸக்குகளுக்கா’ என்று சந்தேகப்படுகிறார்கள்.
Book :42