🔗

புகாரி: 2415

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ: «رَجُلًا أَعْتَقَ عَبْدًا لَهُ، لَيْسَ لَهُ مَالٌ غَيْرُهُ، فَرَدَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَابْتَاعَهُ مِنْهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ»


2415. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஓர் அடிமையை விடுதலை செய்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் அந்த அடிமையை விடுதலை செய்ததை ரத்துச் செய்தார்கள்.

(அவருக்காக அவ்வடிமையை ஏலம்விட்டபோது) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அந்த அடிமையை நுஐம் இப்னு நஹ்ஹாம்(ரலி) வாங்கினார்கள். (பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் விலையை அடிமையின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டார்கள்.)
Book :44