🔗

புகாரி: 2433

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ يُعْضَدُ عِضَاهُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ تَحِلُّ لُقَطَتُهَا، إِلَّا لِمُنْشِدٍ، وَلاَ يُخْتَلَى خَلاَهَا» فَقَالَ عَبَّاسٌ: يَا رَسُولَ اللَّهِ، إِلَّا الإِذْخِرَ، فَقَالَ: «إِلَّا الإِذْخِرَ»


பாடம் : 7 மக்காவாசிகளின் (தொலைந்து போன) பொருள் கண்டெடுக்கப்பட்டால் அதை எப்படி அறிவிப்புச் செய்வது?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் கீழே கேட்பாரின்றி விழுந்து கிடக்கும் பொருளை அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறெவரும் கண்டெடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2433. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அதன் (மக்காவின்) மரங்களை வெட்டக்கூடாது. அதன் வேட்டைப் பிராணிகளை விரட்டியடிக்கக் கூடாது. அதில் கண்டெடுக்கப்படும் (கேட்பாரற்ற) பொருள் அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. அதன் புல்பூண்டுகளைக் கிள்ளவும் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே அப்பாஸ்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இத்கிரைத் தவிரவா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிரைத் தவிரத் தான்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 45