🔗

புகாரி: 2462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ الأَنْصَارَ اجْتَمَعُوا فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَقُلْتُ لِأَبِي بَكْرٍ: انْطَلِقْ بِنَا فَجِئْنَاهُمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ


பாடம் : 19 சாவடிகள்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பனூ சாயிதா குலத்தாரின் சாவடியில் அமர்ந்தார்கள்.

2462. உமர்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை மரணிக்கச் செய்தபோது, அன்சாரிகள் பனூசாயிதா சாவடியில் ஒன்றுகூடிவிட்டார்கள். நான் அபூ பக்ரு(ரலி) அவர்களை, ‘எங்களுடன் வாருங்கள்’ என்று அழைத்தேன். நாங்கள் அன்சாரிகளிடம் பனூ சாயிதா (குலத்தாரின் பஞ்சாயத்துச்) சாவடிக்குச் சென்றோம்.
Book : 46