🔗

புகாரி: 2470

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَسْجِدَ، فَدَخَلْتُ إِلَيْهِ، وَعَقَلْتُ الجَمَلَ فِي نَاحِيَةِ البَلاَطِ، فَقُلْتُ: هَذَا جَمَلُكَ، فَخَرَجَ، فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ، قَالَ: «الثَّمَنُ وَالجَمَلُ لَكَ»


பாடம் : 26 ஒருவர் தம் ஒட்டகத்தைப் பள்ளிவாசலின் முற்றத்தில், அல்லது பள்ளிவாசலின் வாயில் அருகே கட்டி வைப்பது.

2470. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்தார்கள். நானும் அவர்களைச் சந்திக்கப் பள்ளிவாசலில் நுழைந்தேன். ஒட்டகத்தை (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் முன்பு, கற்கள் பதிக்கப்பட்டிருந்த நடைபாதையில் கட்டி வைத்தேன்.

(நபியவர்களிடம் சென்று), ‘இதோ, தங்கள் ஒட்டகம்’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தைச் சுற்றி உலாவத் தொடங்கினார்கள். ‘ஒட்டகமும் (அதன்) விலையும் உனக்கே’ என்று கூறினார்கள்.
Book : 46