🔗

புகாரி: 2550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا نَصَحَ العَبْدُ سَيِّدَهُ، وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ»


பாடம்: 17

அடிமையைக் கேவலமாகக் கருதுவதும் என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூறுவதும் வெறுப்புக்குரியதாகும்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்…. (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை…. (16.75)

அவ்வேளை வாயிலில் அவளுடைய எஜமான் (கணவன்) நிற்பதை இருவரும் கண்டார்கள். (12.25)

உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறை நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில்… (4,25)

மேலும், நபி (ஸல்) அவர்கள் உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: உன் எஜமானிடம் (ரப்பிடம்) என்னைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்று (யூசுஃப் ) கூறினார். (12:42)

மேலும் நபி (ஸல்) அவர்கள், உங்கள் தலைவர் யார்? என்று கேட்டார்கள்.


2550. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வணங்கி வந்தால் அவருக்கு இருமடங்கு நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 49