🔗

புகாரி: 2590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا لِيَ مَالٌ إِلَّا مَا أَدْخَلَ عَلَيَّ الزُّبَيْرُ، فَأَتَصَدَّقُ؟ قَالَ: «تَصَدَّقِي، وَلاَ تُوعِي فَيُوعَى عَلَيْكِ»


பாடம் : 15 ஒருத்திக்குக் கணவன் இருக்கும் போதே, தன் கணவனல்லாத மற்றவர்களுக்கு அவள் அன்பளிப்புச் செய்வதும், தனது அடிமையை விடுதலை செய்வதும்.

அவள் விவரமற்ற பேதையாக இல்லாமலிருந்தால் செல்லும்; அவள் விவரமற்ற பேதையாக இருந்தால் செல்லாது.

அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்கள் வாழ்க்கைக்கு நிலைபாட்டைத் தரக் கூடியவையாக உங்களுக்கு அல்லாஹ் ஆக்கியுள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர்களிடம் ஒப்படைக்காதீர்கள். (4.:5)

2590. அஸ்மா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்.
Book : 50