🔗

புகாரி: 2603

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، فَقَضَانِي وَزَادَنِي»


பாடம் : 23 கைவசம் பெற்றுக் கொண்ட அன்பளிப்பும், பெற்றுக் கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹவாஸின் குலத்தாருக்கு அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக (கனீமத்தாக) தாங்கள் பெற்றவற்றை, அவை பங்கிடப்படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்து விட்டார்கள்.

2603. ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம்  (அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் போது) சென்றேன், எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.
Book : 50