🔗

புகாரி: 2604

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


2604. ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிரயாணத்தில் ஒட்டகம் ஒன்றை நான் விற்றேன். மதீனாவிற்கு நான் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக்அத்துக்களைத் தொழு என்று கூறினார்கள்.

பிறகு நிறுத்(துத் தந்)தார்கள். சிறிது அதிகமாகவும் தந்தார்கள். ஷாம் வாசிகள் ஹர்ராவுடைய நாளில் அதை எடுத்துக் கொள்ளும் வரை அதிலிருந்து சிறிதளவு எப்போதும் என்னிடம் இருந்து வந்தது.
Book :50