🔗

புகாரி: 2636

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لاَ تَشْتَرِهِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ»


பாடம் : 37 ஒரு மனிதர் (மற்றொரு மனிதரை) குதிரையின் மீது ஏற்றி (அனுப்பி) விட்டால் அது உம்றாவையும், சதகாவையும் போன்றதாகும். அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவனுக்கு உரிமையுண்டு என்று சிலர் கூறினர்.

2636. உமர்(ரலி) அறிவித்தார்.

நான் இறைவழியில் (போரிடுவதற்காக எனக்குச் சொந்தமான) ஒரு குதிரையின் மீது ஒருவரை ஏற்றி அனுப்பினேன். அந்த குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (‘அதை வாங்கலாமா?’ என்று) கேட்டேன். அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெறாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book : 51