«خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ أَقْوَامٌ تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ، وَيَمِينُهُ شَهَادَتَهُ»
قَالَ إِبْرَاهِيمُ: «وَكَانُوا يَضْرِبُونَنَا عَلَى الشَّهَادَةِ، وَالعَهْدِ»
2652. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
(சிறுவர்களாக இருந்தபோது) நாங்கள், “அஷ்ஹது பில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் சாட்சியம் அளிக்கிறேன்” என்றோ அல்லது, “அலய்ய அஹ்துல்லாஹ்-அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி” என்றோ கூறினால் நபித்தோழர்கள் எங்களைக் கண்டிப்பவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம்: 52