🔗

புகாரி: 2676 & 2677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبًا لِيَقْتَطِعَ مَالَ رَجُلٍ – أَوْ قَالَ: أَخِيهِ – لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ” وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَ ذَلِكَ فِي القُرْآنِ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77]- الآيَةَ إِلَى قَوْلِهِ: – {عَذَابٌ أَلِيمٌ} [آل عمران: 77]،

فَلَقِيَنِي الأَشْعَثُ، فَقَالَ: مَا حَدَّثَكُمْ عَبْدُ اللَّهِ اليَوْمَ؟ قُلْتُ: كَذَا وَكَذَا، قَالَ: فِيَّ أُنْزِلَتْ


2676 & 2677. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.

‘ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண (வாக்குமூலத்)தின்போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் இந்த வாக்கை உறுதிப்படுத்தி, திருக்குர்ஆனின் மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை இறக்கினான். அப்போது அஷ்அஸ்(ரலி) என்னைச் சந்தித்து, ‘அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?’ என்று கேட்க, நான். ‘இன்னின்ன விஷயங்களைப் பேசினார்’ என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது’ என்று கூறினார்கள்.
Book :52