لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبْعِ، لِأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ»
பாடம் : 3 மூன்றிலொரு பங்கு மரண சாசனம் செய்தல்.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதாரும் மூன்றிலொரு பங்குக்கு மேல் மரண சாசனம் செய்யக் கூடாது என்று கூறினார். ஏனெனில், (நபியே!)அவர்களிடையே நீங்கள் அல்லாஹ் அருளிய (சட்டத்)தைக் கொண்டே தீர்ப்பளியுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 5:49)
2743. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
மக்கள் (தம் மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்’ என்று கூறினார்கள்.
Book : 55