أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا وَيْلَكَ» فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ
2755. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ஒருவர் குர்பானி ஒட்டகம் ஒன்றை ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டார்கள். உடனே அவரிடம், ‘அதில் நீ ஏறிக் கொள்’ என்று கூறினார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இது குர்பானி (கொடுக்கப்பட்டவுள்ள) ஒட்டகம்’ என்று கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும் போது), ‘அழிந்து போவாய்! அதில் ஏறிக் கொள்’ என்று கூறினார்கள்.
Book :55