🔗

புகாரி: 2759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ هَذِهِ الآيَةَ نُسِخَتْ، وَلاَ وَاللَّهِ مَا نُسِخَتْ، وَلَكِنَّهَا مِمَّا تَهَاوَنَ النَّاسُ، هُمَا وَالِيَانِ، وَالٍ يَرِثُ وَذَاكَ الَّذِي يَرْزُقُ، وَوَالٍ لاَ يَرِثُ، فَذَاكَ الَّذِي يَقُولُ بِالْمَعْرُوفِ، يَقُولُ: لاَ أَمْلِكُ لَكَ أَنْ أُعْطِيَكَ


பாடம் : 18 அல்லாஹ் கூறுகிறான்: (உங்கள்) சொத்துகளைப் பங்கிடும் போது (தூரத்து) உறவினர்களும், அனாதைகளும், ஏழை எளியவர்களும் வருவார்களாயின் அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதேனும்) கொடுங்கள். (4:8)

2759. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மக்கள் சிலர், ‘இந்த (திருக்குர்ஆன் 04:08) இறைவசனம் (கூறும் சட்டம்) மாற்றப்பட்டுவிட்டது’ என்று கருதுகிறார்கள். இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! இது மாற்றப்படவில்லை. ஆனால், மக்கள் இதை இலேசாகக் கருதி (செயல்படுத்தாமல் விட்டு)விட்டார்கள். காப்பாளர்கள் இரண்டு வகைப்படுவர். ஒரு வகையினர் (இறப்பவரின்) காப்பாளராவார். இவர் வாரிசாவார். இந்த (இரத்த பந்தமுள்ள) காப்பாளர் தான் (தூரத்து உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்) கொடுப்பார்.

மற்றொரு காப்பாளர், இவர் வாரிசாக மாட்டார். (உதாரணமாக, அனாதைகளின் காப்பாளர்.) இவர்தான், (சொத்தைப் பங்கிடும்போது தமக்கும் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் ஏழை எளியவர்களுக்கும், அனாதைகளுக்கும்) நல்ல முறையில் (இன்சொல் பேசி அன்புடன்), ‘நான் உனக்கு எதுவும் தர இயலவில்லை’ என்று கூறி விடுவார்.
Book : 55