🔗

புகாரி: 2779

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ»، قَالُوا: لاَ نَطْلُبُ ثَمَنَهُ، إِلَّا إِلَى اللَّهِ


பாடம் : 34 வக்ஃபு செய்பவர், இதற்கான விலையை நாம் அல்லாஹ்விடமே கேட்கின்றோம் என்று கூறினால் அது செல்லும்.

2779. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குலத்தார், ‘அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்கள்.
Book : 55