«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُكْلَمُ أَحَدٌ فِي سَبِيلِ اللَّهِ، وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُكْلَمُ فِي سَبِيلِهِ إِلَّا جَاءَ يَوْمَ القِيَامَةِ، وَاللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالرِّيحُ رِيحُ المِسْكِ»
பாடம் : 10 அல்லாஹ்வின் பாதையில் காயப்படுத்தப்படுபவர் (பெறும் சிறப்பு)
2803. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் – உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை ‘(அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வே அறிந்தவன் – மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும், கஸ்தூரி மணம் கமழ்கிறவராகவுமே வருவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56