🔗

புகாரி: 2811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ فَتَمَسَّهُ النَّارُ»


பாடம் : 16 அல்லாஹ்வின் பாதையில் புழுதியடைந்த பாதங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

(போருக்குச் செல்லாமல்) அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் பின்தங்கி விடுவதும், அவரைப் பற்றி அக்கறை காட்டாமல் தங்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் அழகல்ல.

ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் களைப்பு இவற்றில் எந்தத் துன்பம் அவர்களைத் தீண்டினாலும், நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பாதையில் எந்த அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும், எந்தப் பகைவனுக்கெதிராகவும் அவர்கள் ஒரு வெற்றியைப் பெற்றாலும் அவர்களுக்கு ஒரு (நற்செயல் புரிந்த) நன்மை எழுதப் படாமல் இருப்பதில்லை. நிச்சயமாக, அல்லாஹ் நற்செயல் புரிவோரின் பிரதிபலனை வீணாக்குவதில்லை. (9:120)

2811. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியானின் பாதங்கள் இரண்டிலும், இறைவழியில் புழுதி படிந்திருக்க, அதை நரக நெருப்புத் தீண்டுவதில்லை. என அபூ அப்ஸ் அப்துர் ரஹ்மான் இப்னு ஜப்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 56