«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ، بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»
பாடம்: 36
அல்லாஹ்வின் பாதையில் நோன்பு நோற்பதின் சிறப்பு.
2840. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
அத்தியாயம்: 56